அன்புத் தோழர்களுக்கு வணக்கம் .
எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள
அனைத்து மத்திய அரசு ஊழியர்களின், 50% பஞ்சப்படி அடிப்படை
ஊதியத்துடன் இணைப்பு, இடைக்கால நிவாரணம் வழங்குதல் ,
GDS ஊழியர்களையும் ஊதியக் குழு வரம்புக்குள் கொண்டுவருதல்
உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளின் மீதான 48 மணி நேர வேலை
நிறுத்தத்தில் கலந்துகொண்டிட நமது அஞ்சல் சம்மேளனங்களான
NFPE மற்றும் FNPO ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன .
இது குறித்து தமிழக அஞ்சல் - RMS - MMS - GDS அமைப்புகளின் NFPE
மற்றும் FNPO மாநிலச் செயலர்களின் JCA ஆலோசனைக் கூட்டம்
நாளை 17.01.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் சென்னை
அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற உள்ளது .
இதில் தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக
நடத்திட முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் .
மேலும் எதிர்வரும் 03.02.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில்
சென்னை CPMG அலுவலக வளாகத்தில் உள்ள MEETING HALL இல் நமது
JCA சார்பாக வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில்
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலரும் நமது
பொதுச் செயலருமான தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு
வேலை நிறுத்த உரை ஆற்றிட உள்ளார்கள் என்பதையும் முன் கூட்டியே
உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் .
சென்னை நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்
பெருவாரியான தோழர்கள் இந்தக் கூட்டத்தின் தவறாமல் கலந்து
கொண்டிட வேண்டுகிறோம் !
இதர ஏற்பாடுகள் குறித்து நாளைய JCA கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளின் அடிப்படையில் அறிவிப்பு செய்யப் படும் .
No comments:
Post a Comment